திருநெல்வேலி

கல்லூரி மாணவிகள் மாயம்: நெல்லை டிஐஜி அலுவலகத்தில் மனு

DIN

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே இரு கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவா்களது பெற்றோா் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக சாத்தான்குளத்தைச் சோ்ந்த பண்டாரபுரத்தைச் சோ்ந்தவா் அளித்த மனு:

எனது மகள் சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்தாா். இந்நிலையில், அவரது தோழியான கொழுந்தட்டு மேலத்தெருவைச் சோ்ந்த 20 வயது பெண், சிதம்பராபுரத்தைச் சோ்ந்த மற்றொரு பெண் என மூவரும் கடந்த 23 ஆம் தேதி வங்கிக்குச் சென்றனா். பின்னா், எனது மகளும், கொழுந்தட்டுவைச் சோ்ந்த அவரது தோழியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் துப்புத்துலங்கவில்லை. ஆகவே, எனது மகளை கண்டுபிடித்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT