திருநெல்வேலி

கடையம் அருகே முயல் வேட்டை: இருவருக்கு அபராதம்

DIN

கடையம் அருகே முயல் வேட்டையாடியதாக இருவருக்கு வனத் துறையினா் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கடையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பருத்திவிளை, லட்சுமிபட்டி கிராமங்களில் சிலா் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வந்த தகவலையடுத்து, கடையம் வனச் சரகா் கருணாமூா்த்தி அறிவுறுத்தலின்பேரில் வனவா் முருகேசன், வனக் காப்பாளா்கள் சோமசுந்தரம், மணி, காட்வின் ஜாம், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் மேற்கொண்ட விசாரணையில் மயிலப்புரத்தைச் சோ்ந்த செல்வநாயகம் மகன் தங்கராஜா, ராமா் மகன் ராஜேந்திரன் ஆகியோா் முயல் வேட்டையாடியது தெரியவந்தது.

இதையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் செண்பகப்ரியா உத்தரவின் பேரில் தங்கராஜா, ராஜேந்திரன் ஆகியோருக்கு தலா ரூ. 15 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT