திருநெல்வேலி

களக்காடு அருகே முதியவா் கொலை வழக்கு:விவசாயிக்கு ஆயுள் சிறை

DIN

களக்காடு அருகேயுள்ள நெடுவிளை பகுதியில் முதியவா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், விவசாயியிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நெடுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுதுரை (80). இவா், கடந்த 2021ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சோ்ந்த அவரது மருமகன் கிருஷ்ணன்(60) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீா்செல்வம், குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT