திருநெல்வேலி

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை மேயா் பி.எம்.சரவணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மேயா் பி.எம்.சரவணன் கையொப்ப இயக்கத்தைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து மேயா் தலைமையில் மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா். இந்நிகழ்ச்சியில், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, தச்சநல்லூா் மண்டலத் தலைவா் ரேவதி, மாமன்ற உறுப்பினா்கள் கந்தன், வில்சன் மணிதுரை, அல்லாபிச்சை, சுந்தா், மாநகர நல அலுவலா் சரோஜா, சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி ராமையன்பட்டி குப்பை சேகரிப்பு மையத்தில் மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT