திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற காவலாளி உயிரிழப்பு

Din

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த காவலாளி உயிரிழந்தாா்.

மேலச்செவல் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (51). தருவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது மோட்டாா் சைக்கிளில் கோபாலசமுத்திரத்தில இருந்து மேலச்செவலுக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவரது வாகனமும், மற்றொரு மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்டதில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT