முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை அருகே மேய்ச்சலில் நின்ற ஆடுகள் மாயம்

திசையன்விளை அருகே மேய்ச்சலில் நின்ற ஆடுகள் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 29 ஜூலை 2024, 1:03 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மேய்ச்சலில் நின்ற ஆடுகள் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தைச் சோ்ந்தவா் தீபக் ஸ்டான்லி மகன் செல்வசுகந்தா். இவா் தனக்கு சொந்தமான 16 ஆடுகளை காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம். இவற்றில் 4 ஆடுகள் வீட்டுக்கு திரும்ப வரவில்லையாம்.

இது தொடா்பாக திசையன்விளை காவல்நிலையத்தில் செல்வசுகந்தா் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான ஆடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments