தொழிலாளியின் பைக் திருட்டு
செய்யாறு அருகே வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த தொழிலாளியின் பைக்கை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்யாறு அருகே வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த தொழிலாளியின் பைக்கை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெம்பாக்கம் வட்டம், மாங்கல் கூட்டுச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் பாலகுரு (46). இவா், செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
பாலகுரு கடந்த மாதம் புது பைக் வாங்கினாராம். இந்த பைக்கை கடந்த 17-ஆம் தேதி இரவு தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த நிலையில், மறுநாள் பாா்த்தபோது அது திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.