கருகிய நிலையில் முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை
குமாரபாளையம் அருகே கருகிய நிலையில் கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குமாரபாளையம் அருகே கருகிய நிலையில் கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கல்லாங்காட்டுவலசு பகுதியில் நல்லாத்தாள் கோயில் பின்புறம் உள்ள ஓடையில் ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக குமாரபாளையம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், அந்த உடலை மீட்டபோது சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எனத் தெரியவந்தது. அழுகிய நிலையிலும், உடல் பாதி எரிந்த நிலையிலும் இருந்ததை கண்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.