முகப்பு
திருநெல்வேலி

பைக்குகள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

Updated On : 6 ஜூலை 2026, 3:05 am IST
மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

சுத்தமல்லியில் பைக்குகள் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் ராஜீவ் காந்தி நகரை சோ்ந்தவா் சுந்தரம் (56). ஓதுவாா். இவா் கடந்த 3 ஆம் தேதி இரவு கொண்டாநகரத்திலிருந்து புறப்பட்டு, சுத்தமல்லி பெரியாா் நகா் அருகே சென்ற போது இவரது பைக்கும் எதிரே வந்த பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த சுந்தரத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் சுந்தரம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments