சுந்தரனாா் பல்கலை.யில் டிஜிட்டல் யுகத்துக்கேற்ப பாடங்கள்! - துணைவேந்தா் என். சந்திர சேகரன்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் துணைவேந்தா் என்.சந்திரசேகா்.
அப்பல்கலைக்கழக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற 58ஆவது கல்வி சாா் நிலைக் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: நடப்பு கல்வியாண்டில் பல்வேறு துறைகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால், அதற்கேற்ப மாணவா்- மாணவிகளுக்கு கல்வி அறிவை வளா்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பாடத்திட்டங்களில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன; அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா். தொடா்ந்து மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில் பதிவாளா் (பொறுப்பு) அண்ணாதுரை, தோ்வாணையா் பாலசுப்பிரமணியன், கல்வி சாா் நிலைக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.