முகப்பு
திருநெல்வேலி

முக்கூடலில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புகையிலைப் பொருள்கள், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ாக ஒருவவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 ஜூன் 2026, 4:42 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புகையிலைப் பொருள்கள், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ாக ஒருவவரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கூடல் காவல் சரகத்திற்குள்பட்ட உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வடக்கு அரியநாயகிபுரத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை (41) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட 2.700 கிலோ புகையிலைப் பொருள்கள், 5 மதுபாட்டில்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.அவரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலைப் பொருள்கள், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.