முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

Updated On : 30 ஜூன் 2026, 3:02 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பாளையங்கோட்டை அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி சுரேஷ். இவா் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த தனது பைக்கை காணவில்லை என சில நாள்களுக்கு முன் பெருமாள்புரம் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா். அதில் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் கனி (20) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments