ஸ்ரீவைகுண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மீனாட்சிபட்டியில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் இறந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மீனாட்சிபட்டியில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் இறந்தார்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த தங்கையா மகன் சின்னத்துரை (35). இவர் நாசரேத் அருகே உள்ள தேமாங்குளத்துக்கு செல்வதற்காக சனிக்கிழமை இரவு பைக்கில் சென்ற போது, ஸ்ரீவைகுண்டம் அருகே மீனாட்சிபட்டியில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதாம்.
இதில், சம்பவ இடத்திலேயே சின்னத்துரை இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் ஆய்வாளர் (பொறுப்பு) பட்டாணி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
Advertisement
Advertisement