திருச்செந்தூர் சன்னதித் தெருவிலுள்ள ஸ்ரீ அகத்தியர் கோயிலில் மார்கழி மாத பெளர்ணமியை முன்னிட்டு புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அகத்தியர் நாம வழிபாடு, தீப வழிபாடு, திருமுறை பாராயணம், மகேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பொதிகை மலை புனித யாத்திரை குழுவினர் மற்றும் செந்தில் பொதிகை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினர் செய்திருந்தனர்.