தூத்துக்குடி

சாத்தான்குளம் கோயிலில் பஜனைக் குழு வெள்ளி விழா

DIN

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீபஞ்சபிரம்ம அம்பிகை மடம்  ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி பக்த பஜனை குழுவின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு அறங்காவலர் குழுத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் பழனிவேல், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஜனை குழுவைச் சேர்ந்த  ஐயப்பன் வரவேற்றார்.
அழகுசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மார்கழி மாதம் 30 நாள்களும் பக்த பஜனை குழுவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பழனிவேல், சுடலைமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கார்த்திகேயன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT