தூத்துக்குடி

ஏரலில் நண்பர் அடித்துக் கொலை: தொழிலாளி கைது

DIN

ஏரலிலில் நண்பரை  அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஏரல்  அருகே  உள்ள திருவழுதிநாடார் விளையைச் சேர்ந்தவர் ஆத்திபழம் (55).  இவரது  நண்பர் கிருஷ்ணமூர்த்தி (45) .  இருவரும் திங்கள்கிழமை  இரவில் மது அருந்தியுள்ளனர். அப்போது,   இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில்,    கிருஷ்ணமூர்த்தி உருட்டுக் கட்டையால்  ஆத்திபழத்தை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த  ஆத்திபழத்தை  அருகில்  இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி  அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவர்இறந்தார். இதுகுறித்து  ஏரல் போலீஸார் வழக்குப் பதிந்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT