தூத்துக்குடி

சோழாபுரத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

DIN

சோழாபுரம் இந்துநாடார் காமராஜ் உயர்நிலைப் பள்ளியில் திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் ஒப்பித்தல், எழுதுதல், விநாடி- வினா போட்டிகள் நடைபெற்றது.
பள்ளிச் செயலர் பரமசிவன் தலைமை வகித்தார். இணைச் செயலர் தேன்மணி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பொன்னுநடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் பத்திரகாளி வரவேற்புரையாற்றினார். திருக்குறள் ஒப்பித்தல், எழுதுதல், விநாடி- வினா போட்டிகளில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தாய்மொழி வழிக் கல்வியின் அவசியம் குறித்தும், திருக்குறளின் மேன்மை குறித்தும், திருக்குறள் பேரவைச் செயலர் வைதேகி சிறப்புரையாற்றினார். போட்டிகளில் பங்கேற்ற மாணவ,  மாணவியர் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT