நாலுமாவடி கோயிலில் தீப்பந்தத் திருவிழா
குரும்பூர் அருகே நாலுமாவடி அருள்மிகு ஸ்ரீபாதக்கரை சுவாமி கோயிலில் தீப்பந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குரும்பூர் அருகே நாலுமாவடி அருள்மிகு ஸ்ரீபாதக்கரை சுவாமி கோயிலில் தீப்பந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு அன்னதானம், 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம், மகாவிஷ்ணு ஹோமம், கோபூஜை, சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.
நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம், சுவாமி அருள்வாக்கு வழங்குதல் நடைபெற்றன.