முகப்பு
தூத்துக்குடி

இடையன்விளையில் நாளை ஸ்தோத்திர விழா

நாசரேத் அருகிலுள்ள இடையன்விளை இம்மானுவேல் ஜெபவீட்டின் 70ஆவது ஆண்டு ஸ்தோத்திரப் பெருவிழா டிச. 26 ஆம் தேதி காலை 10முதல் மாலை 3 மணிவரை நடைபெறுகிறது.

Updated On : 25 டிசம்பர் 2018, 7:21 am IST
பகிர்:

நாசரேத் அருகிலுள்ள இடையன்விளை இம்மானுவேல் ஜெபவீட்டின் 70ஆவது ஆண்டு ஸ்தோத்திரப் பெருவிழா டிச. 26 ஆம் தேதி காலை 10முதல் மாலை 3 மணிவரை நடைபெறுகிறது.
இம்மானுவேல் ஜெபவீடு குழுவினர் இன்னிசைப் பாடல்கள் பாடுகின்றனர். நாலுமாவடி சேகரகுரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி தலைமை  வகிக்கிறார். மூக்குப்பீறி சேகர குரு என்.எஸ்.ஜெரேமியா ஆரம்ப ஜெபம் செய்கிறார். சிறப்பு பாடல்கள், சாட்சிகள் இடம் பெறுகின்றன. சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 
விழாவில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு செய்தி கொடுக்கிறார். விழா ஏற்பாடுகளை சகோதரி  பொன்சீலி சாமுவேல் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments