முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி முற்றுகை

தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தினால் விவசாயப் பயிர்கள் மிகக்

Updated On : 25 டிசம்பர் 2018, 7:17 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தினால் விவசாயப் பயிர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் சரியான விளைச்சலின்றி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 2016-17ஆம் ஆண்டு விவசாயிகள் காப்பீடு செய்த மக்காச்சோளம், உளுந்து, பாசி, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது வரை காப்பீட்டு நிறுவனம் பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. 
பயிர்க் காப்பீட்டுத் தொகை உரிய விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் 4  ஆண்டுகளாக விளைச்சல் இல்லாத காரணத்தினால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் அனைத்துப் பயிர்க் கடன் மற்றும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 
மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தினால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், அவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தியும் மதிமுக மேற்கு ஒன்றியச் செயலர் அழகர்சாமி தலைமையில், மதிமுக மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ரமேஷ், நகரச் செயலர் பால்ராஜ் உள்பட திரளான விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments