ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு பூஜை
திருச்செந்தூர் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் கோயிலில் ராமானுஜர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருச்செந்தூர் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் கோயிலில் ராமானுஜர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, மார்கழி பஜனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன், சக்கரத்தாழ்வார், மாகலட்சுமி, கருடாழ்வார், வரசித்தி ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் ஸ்ரீ ராமானுஜருக்கு 16 வகையான அபிஷேகம் அலங்காரத்தை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில், திருக்குறுங்குடி பெரியநம்பி திருமாளிகை ஸ்ரீதர்ம ராமானுஜர் உபன்யாசம் செய்தார். இதில் நம்மாழ்வார் ராமானு ஜர்தாசன், சாரங்க ராமானுஜர்தாசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.