கொட்டங்காடு அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா
உடன்குடி கொட்டங்காடு வீரலட்சுமிபுரம் அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் ஆடிமாதத் திருவிழா மற்றும் கூழ்படையல் பூஜை நடைபெற்றது.
உடன்குடி கொட்டங்காடு வீரலட்சுமிபுரம் அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் ஆடிமாதத் திருவிழா மற்றும் கூழ்படையல் பூஜை நடைபெற்றது.
இதையொட்டி ஜூலை 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, 8 .30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, கூழ்படையல் பூஜை, இரவு 9 மணிக்கு அம்மன் உள் பிரகார சப்பர பவனி, அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, அன்னதானம் போன்றவை நடைபெற்றது.
ஆடி மாதம் முழுவதும் இரவு 7 மணிக்கு கூழ்படையல் பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா பெ.கு.பெ. சுந்தரஈசன் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.