தூத்துக்குடி

22இல் கோவில்பட்டியில் வளாக நேர்காணல்

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அக். 22ஆம் தேதி டிப்ளமோ படித்த மாணவ, மாணவிகளுக்கான வளாக நேர்காணல் நடைபெறுகிறது. 
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு நிறுவன தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இம்மாதம் 22ஆம் தேதி கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல் நடைபெறுகிறது.  
மூன்றாண்டுகள் டிப்ளமோ படிப்பில் இயந்திரவியல், ஆட்டோ மொபைல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்பியல், இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய துறைகளில் 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற 24 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வளாக நேர்காணலில் பங்கேற்கலாம். 
எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் தகுதியுடையோர் தங்களுடைய சுயவிவரப் பட்டியல், கல்வித் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்களுடன்), ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் அக். 22ஆம் தேதி காலை 9 மணிக்கு நேரில் கல்லூரிக்கு வருகை தந்து இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். 
மேலும் விவரங்களுக்கு 94421-52506  என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT