தூத்துக்குடி

இலுப்பையூரணி பெருமாள் கோயிலில் புதிய சகடை வாகன வெள்ளோட்டம்

DIN


கோவில்பட்டி வட்டம் இலுப்பையூரணி பெருமாள் கோயிலில் புதிய சகடை வாகன வெள்ளோட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இலுப்பையூரணி அருள்மிகு அலமேலு மங்கா சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி உற்சவ காலங்களில் சுவாமி, பெருமாள் எழுந்தருளி வீதியுலா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, சுவாமி, பெருமாள் எழுந்தருளி வீதியுலா வரும் சப்பரங்களை தாங்கிச் செல்ல புதிதாக சகடை வாகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கோவில்பட்டி தொழிலதிபர் ராஜகோபால் சார்பில் புதிய சகடை வாகனம் செய்யப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை புதிதாக செய்யப்பட்ட சகடை வாகன வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனக்கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா தொடங்கிவைத்தார்.
இதில், சிவகுமார் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT