தூத்துக்குடி

தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

DIN

குறுக்குச்சாலையில் தையல் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
ஓட்டப்பிடாரம் வட்டம், குறுக்குச்சாலை அன்னலட்சமி நகரைச் சேர்ந்தவர் வண்ணமுத்து. இவரது மனைவி மேரி (35). 
இத்தம்பதியினர் அப்பகுதியில் தையல் தொழிலகம் நடத்தி வருகின்றனர். இருவரும் வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றனராம். மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். 
உள்ளே சென்று பார்த்தபோது, பூட்டை உடைத்து மர்மநபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் நகையை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT