தூத்துக்குடி

கோவில்பட்டி கல்வி மாவட்டபள்ளிகளுக்கு நல உதவிகள்

DIN

கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்குள்பட்ட 30 பள்ளிகளுக்கு தேசிய பசுமைப் படை சாா்பில் மரக்கன்றுகள் பராமரிப்பதற்கான நிதி மற்றும் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். பள்ளி துணை ஆய்வாளா் சசிகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா் பவனந்தீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி மாவட்டத் தலைவா் விநாயகா ரமேஷ், முன்னாள் ரோட்டரி துணை ஆளுநா் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் மரக்கன்றுகள் பராமரிப்பு நிதியாக ரூ.5 ஆயிரம் மற்றும் பராமரிப்பு உபகரணங்களை வழங்கினா். பள்ளித் தலைமையாசிரியா் சுப்பாராயன் வாழ்த்திப் பேசினாா்.

தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலகணேசன் வரவேற்றாா். விஜயாபுரி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT