தூத்துக்குடி

உடன்குடியில் அஹ்மதிய்யா ஜமாஅத் மாநாடு

DIN

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி மாவட்ட முதியோர் அணி மாநாடு உடன்குடியில் நடைபெற்றது.
புதுமனை அஹ்மதிய்யா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு அமைப்பின் மேலிடப் பிரதிநிதி சுலைமான் தலைமை வகித்தார். ரஹ்மத்துல்லா, அன்வர் அஹமது ஆகியோர் திருக்குர் ஆன் ஓதினர். அலிமுல்லா, பக்ரூதீன் ஆகியோர் உருதுப்பாடல் பாடினர்.
மாநாட்டில், அமைப்பின் 3 மாவட்டத் தலைவர் நிஜாமுத்தீன், ஜமாஅத் தலைவர்கள் அப்துல்காதர், நாசிர் அஹமது, கலீல் அஹமது, அப்துல்காதர், அப்துல்ரஹ்மான், சுஹைல், பண்டாரஞ்செட்டிவிளை சேகரகுரு ஜான்சாமுவேல் ஆகியோர்பேசினர். ஏற்பாடுகளை உடன்குடி முதியோர் அணித் தலைவர் சிராஜூதீன், இளையோர் அணித் தலைவர் முகமது அலி, நிர்வாகிகள் ஷாஜகான், தாஹிர் ஆகியோர் செய்திருந்தனர். 
மாநாட்டுக்குழுத் தலைவர் ஜலாலுதீன் வரவேற்றார். பஷீர் அஹமது ஆண்டறிக்கை வாசித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT