தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

DIN

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து  இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
கோவில்பட்டி ராஜீவ் நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் கருப்பசாமி(21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துமாலையுடன் கொடுக்காம்பாறை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மின் அமைக்கும் பணிக்காக சென்றிருந்தாராம்.  அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது கருப்பசாமி மீது மின்சாரம் பாய்ந்ததில்  பலத்த காயமடைந்தார்.  அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு  சென்றனர்.  அங்கு  அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார். 
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT