தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பாரதியார் நினைவு தினம்

DIN

சாத்தான்குளம் சன்னதி  தெருவில் பாரதி இலக்கிய மன்றம் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு தினம்  புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர் கனகராஜ் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தொடக்கக் கல்வி அலுவலர் சாமுவேல், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜான்லூயிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் பற்றி ஓய்வுபெற்ற தமிழாசிரியர் வீரசிகாமணி, ஓய்வுபெற்ற  வட்டாட்சியர்  நடராஜன், அஞ்சலக அதிகாரி ராஜி ஆகியோர் பேசினர். பாரதியார் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
யோகா ஆசிரியை ராஜலட்சுமி, அஞ்சலக ஊழியர்கள் அழகய்யா, லெனின்முருகன், ஆசிரியர் சந்தனமரியான், மகேஸ்வரி, மயில், ராஜபாண்டியன், கோபாலகிருஷ்ணன், வெள்ளைப்பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாரதி இலக்கிய மன்ற அமைப்பாளர் ஈஸ்வர் சுப்பையா வரவேற்றார். ஓய்வுபெற்ற பள்ளி எழுத்தர் பிரேம்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT