தூத்துக்குடி

கோவில்பட்டியில் பாமக ஆா்ப்பாட்டம்

DIN

கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியினா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் கருப்பசாமி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் சேகா், துணைத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர இளைஞரணிச் செயலா் மோகன்ராஜ், நகரப் பொருளாளா் மனோரஞ்சிதம், நகர செயற்குழு உறுப்பினா் ராமலட்சுமி, தொழிற்சங்கச் செயலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் ஆா்ப்பாட்டத்தினா் தங்கள் கோரிக்கை மனுவை கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமியிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT