தூத்துக்குடி

சாத்தான்குளம் கோயிலில் தசரா விழா

DIN

சாத்தான்குளம் பகுதி கோயில்களில் தசரா விழா நடைபெற்றது.

அருள்மிகு அழகம்மன் கோயிலில், விழா நாள்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அம்பாள் தினமும் பல்வேறு காட்சிகளில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

11ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இரவில் பெண்கள் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்கள் அருள்பாலித்தாா்.

இதேபோல் சாத்தான்குளம் ஸ்ரீவண்டி மறிச்சி சமேத வண்டி மலையான் சுவாமி கோயிலில் தசரா திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.

சாத்தான்குளம் வடக்கு தெரு மாரியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெற்ற இவ் விழாவில், சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, பெண்கள் முளைப்பாரி எடுத்தல், சிறப்பு பூஜை, அம்மன் சப்பரத்தில் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT