தூத்துக்குடி

கொட்டங்காடு கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

உடன்குடி, செப். 25: உடன்குடி அருகேயுள்ள கொட்டங்காடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் புரட்டாசி திருவிழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும்

மாலையில் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, சிறப்பு அன்னதானம், சிவப்பு, பச்சை, வெள்ளை சாத்தி அம்மன் பவனி

ஆகியவை நடைபெற்றன. திருவிழாவின் 9 ஆம் நாளான வியாழக்கிழமை இரவில் 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பி.சுந்தர ஈசன், கிராம மக்கள்

செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT