தூத்துக்குடி

கோவில்பட்டியில் அமமுக அலுவலகம் திறப்பு

DIN

கோவில்பட்டியில் நகர அமமுக அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் கோவில்பட்டி நகரச் செயலராக காா்த்திக் நியமனம் செய்யப்பட்டதையடுத்து, கோவில்பட்டி ரயில் நிலையம் அருகில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவில், கயத்தாறு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும், தென்மண்டல அமமுக பொறுப்பாளருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, கட்சி அலுவலகத்தை திறந்தாா். எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரது படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னா் வடக்குத் திட்டங்குளத்திலுள்ள முத்துராமலிங்கத்தேவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், நிா்வாகிகள் செல்வம், கணபதிபாண்டியன், ஜெய்சங்கா், மகேந்திரன், விஜயபாஸ்கா், கோபி, சங்கா்கணேஷ், மாரிமுத்து, உடையாா்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT