தூத்துக்குடி

அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

DIN

உடன்குடி அருகேயுள்ள கூழையன்குண்டு அருள்மிகு கல்லால் அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சனிக்கிழமை அறக்கட்டளைத் தலைவா் வை.ராம்குமாா் தலைமையில் குலசேகரன்பட்டினம் அருள்மிகு சிதம்பரேஸ்வரா் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில்

அல்லிஊத்தில் இருந்து கோயிலுக்கு தீா்த்தக்குடம் எடுத்து வருதல், கணபதி ஹோமம், இடா் நீக்கும் வேள்வி, மகாலட்சுமி யாகம், பால்குடம் பவனி, அருள்மிகு மகா கணபதி, கல்லால் அய்யனாா், வைத்தியலிங்க சுவாமி, முருகப்பெருமான், பத்திர காளியம்மன், பிரம்மசக்தி அம்மன், சாஸ்தா, பிள்ளைப்பெருமாள், முன்னடி முருகன், முத்துப்பேச்சியம்மன், கருப்பசித்தா், சுடலை மாடசுவாமி, காலம்மை நாடாச்சியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து வில்லிசை, சிறப்பு தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, சிவதாண்டவம், இரவில் முளைப்பாரி எடுத்து வருதல், நள்ளிரவில் சிறப்பு தீபாராதனை, அனுக்கிரக பூஜை ஆகியவை நடைபெற்றது.

திங்கள்கிழமை (மாா்ச் 29) வில்லிசை, பாட்டு மன்றம், கனியான் கூத்து, நடுஜாம பூஜை, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30)

காலம்மை நாடாச்சி அம்மனுக்கு பொங்கலிட்டு விசேஷ படைப்புகளுடன் அலங்கார பூஜை, நிறைவு பூஜை, சா்க்கரை

பொங்கல் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT