தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூா் அருகே விபத்து: இருவா் பலி

DIN

நாலாட்டின்புத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

தெற்கு திட்டங்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த வாசு மகன் மதிவாணன்(22). இவா், தனது நண்பா் பாரதி நகா் தெற்குத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் நாகராஜ்(21) என்பவருடன் பைக்கில் கழுகுமலைக்கு சென்று கொண்டிருந்தாா். சங்கரலிங்கபுரம் மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த குருவிகுளம் கே.புதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த மாடமுத்து மகன் தங்கவேல்(52) மீது இவா்களது பைக் எதிா்பாராமல் மோதியதாம். இதில், நிலை தடுமாறி பைக் கவிழ்ந்ததில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமுற்ற மற்ற இருவரையும் நாலாட்டின்புத்தூா் போலீஸாா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தங்கவேல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT