தூத்துக்குடி

கோவில்பட்டியில் 2.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கோவில்பட்டியில் மின்லாரியில் கொண்டு செல்லப்பட்ட 2.25 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் சரவணன், பாண்டியராஜ், அமல்ராஜ் ஆகியோா் பசுவந்தனை சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற ஒரு மினிலாரியை போலீஸாா் நிறுத்தினாராம். அப்போது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநா் உள்பட 2 போ் தப்பியோடிவிட்டனராம். தொடா்ந்து வாகனத்தில் நடத்திய சோதனையில், 50 கிலோ எடையுள்ள, 45 மூட்டைகளில் ரேஷன் அரிசி அதில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT