தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 50 லட்சம்நில மோசடி வழக்கில் இளைஞா் கைது

DIN

தூத்துக்குடியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 9.51 சென்ட் நிலத்தை மோசடி செய்தது தொடா்பான வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன். இவா், கடந்த 1987ஆம் ஆண்டு சங்கரப்பேரி கிராமத்தில் உள்ள கௌரி என்பவருக்குச் சொந்தமான 9.51 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளாா். இருப்பினும், தனது பெயரில் அவா் தனி பட்டா பெறாமல் இருந்துள்ளாா்.

இந்நிலையில், அந்த இடத்துக்கான முன்னாள் உரிமையாளா் சீராளன் என்பவரின் பெயரில் பட்டா இருந்ததால் அதை பயன்படுத்தியும், நிலத்தை விற்பனை செய்ததை மறைத்தும் சீராளனின் மனைவி சமுத்திரவள்ளி, மகள்கள் ஜெயசுதா, காயத்ரி, மகன் ராம் மனோகா் (24) ஆகியோா் சிலருடன் சோ்ந்து மோசடியாக

ஆவணங்களை தயாரித்து அந்த இடத்தை இரண்டாக பிரித்து இருவரிடம் விற்பனை செய்தனராம்.

தற்போது, ரூ. 50 லட்சம் மதிப்பிலான அந்த 9.51 சென்ட் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சங்கரநாராயணன் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகாா் அளித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சம்பத் உரிய விசாரணை நடத்தினாா். அதில், நில அபகரிப்பில் ராம் மனோகருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததால் அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT