கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் 20021-2022 ஆம் ஆண்டு பிளஸ்1 பயின்ற மாணவிகள் 456 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை நகா்மன்றத் தலைவா் கருணாநிதி வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் சின்னராசு தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ஜெயலதா முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், உதவித் தலைமையாசிரியை ரூத்ரத்தினகுமாரி மற்றும் ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.