தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பொங்கலோவியம் விழா நடைபெற்றது.
மூன்று நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பங்கேற்று தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தினா்.
மூன்று நாள்களும் நடைபெற்ற கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மாநகராட்சி மேயா் பெ. ஜெகன் பெரியசாமி, காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஜி. சத்யராஜ், ஜூம்பா நடனப் பயிற்றுநா்வி .சந்திரிகா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினா்.
இவ்விழாவில், கல்லூரி தாளாளா், கல்லூரி முதல்வா், துணை முதல்வா், பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.