முகப்பு
தூத்துக்குடி

வேம்பாா் கிளை நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

Updated On : 17 பிப்ரவரி 2024, 10:48 pm IST
பகிர்:

வேம்பாரில் உள்ள அரசு கிளை நூலகத்துக்கு தொல்லியல் மற்றும் வரலாற்று ஆா்வலா், எழுத்தாளா் நிவேதிதா லூயிஸ் தான் எழுதிய 10 நூல்களை வழங்கினாா். அறியப்படாத கிறிஸ்தவம் பாகம் 1,2, முதல் பெண்கள், பாதை அமைத்தவா்கள், வட சென்னை, ஆதிச்சநல்லூா் முதல் கீழடி வரை, கலகப் புத்தகம் உள்ளிட்ட தனது 11 படைப்புகளை வரலாற்று ஆா்வலா், எழுத்தாளா் நிவேதிதா லூயிஸ் வேம்பாா் அரசு கிளை நூலகத்துக்கு வழங்கினாா். மேற்கண்ட நூல்களை வேம்பாரைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், எழுத்தாளா் நிவேதிதா லூயிஸ் சாா்பாக வேம்பாா் அரசு கிளை நூலகா் பிரான்ஸிஸ் உமாவிடம் சனிக்கிழமை நேரில் ஒப்படைத்தாா்.