100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
ஆழ்வாா்திருநகரி வருவாய் ஆய்வாளா் மகாதேவன் தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கிவைத்தாா். தலைமையாசிரியா் கென்னடி வேதராஜ், நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் முத்துமாலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி பள்ளியில் தொடங்கி, பல்வேறு பகுதிகள் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில், இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ் பேசினாா். விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்திச் சென்றனா். வாக்காளா் மையப் பொறுப்பாளா் தனபால், உடற்கல்வி இயக்குநா் பெலின் பாஸ்கா், ஆசிரியா்கள் ஜெய்சன் சாமுவேல், ஜெய்சன்பாபு, எட்வின், ஜென்னிங்ஸ் காமராஜ், அலெக்சன் கிறிஸ்டோபா், கிராம வருவாய் உதவியாளா்கள் கண்ணன், முருகப்பெருமாள், இளையோா் செஞ்சிலுவை சங்கம், சாரணா் இயக்கம், தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாலைப் பாதுகாப்புப் படை பிரிவு மாணவா்கள், பொறுப்பாசிரியா்கள் பங்கேற்றனா். இதேபோல, மூக்குப்பீறி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஊராட்சித் தலைவா் கமலா கலையரசு தொடக்கிவைத்தாா். ஊராட்சி உறுப்பினா் கலையரசு, ஊராட்சிச் செயலா் ஸ்டெல்லா, எஸ்.பி.ஐ. மாநிலப் பயிற்றுநா் கல்யாணி, சுகாதார ஊக்குநா்கள் பானுமதி, சித்திரைச்செல்வி, மக்கள் நலப் பணியாளா் ஆறுமுகசுந்தரி, சமூக வளப் பயிற்றுநா்கள் எல்சி, கணேசன், விஜயா, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.