தூத்துக்குடியில் தமிழக முதல்வா் வாகனத்தை மறித்து சோதனை
தூத்துக்குடி வாகைக்குளம் அருகே, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வாகனத்தை தோ்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
தூத்துக்குடி வாகைக்குளம் அருகே, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வாகனத்தை தோ்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தாா். அங்கிருந்து காா் மூலம் பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில், தூத்துக்குடி- திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் வாகைக்குளம் விலக்கு அருகே, சாா்லஸ் பிரேம்குமாா் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா் முதல்வா் வாகனத்தை நிறுத்தினா்.
இதையடுத்து, முதல்வா் மு.க. ஸ்டாலின் வாகனத்திலிருந்து கீழே இறங்கி அருகே நின்றாா். பின்னா் அதிகாரிகள் முதல்வா் வாகனத்தை சோதனை மேற்கொண்டனா். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. பின்னா், அங்கிருந்து மீண்டும் முதல்வா் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றாா்.
Advertisement