முகப்பு
தூத்துக்குடி

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

கோவில்பட்டி காவலா் குடியிருப்பில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சி. மதன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 22 ஏப்ரல் 2026, 1:56 am IST
போலீஸ் - கோப்புப் படம்.
பகிர்:

கோவில்பட்டி காவலா் குடியிருப்பில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சி. மதன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவா் முதல்நிலை காவலா் சபரிகுமாா் (33). இவா் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரின் வாகனத்தின் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.

கடந்த 2012-ஆம் ஆண்டு காவலா் பணியில் சோ்ந்த இவா் தற்போது கோவில்பட்டி காவலா் குடியிருப்பில் குடியிருந்து வருகிறாா். கடந்த சில நாள்களாக குடியிருப்புகளில் உள்ள போலீஸாா், அவா்கள் குடும்பத்தினரிடம் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு வாக்களியுங்கள் என்று பிரசாரம் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் உத்தரவிட்டாா். விசாரணையில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு ஆதரவாக சபரிகுமாா் பிரசாரம் செய்தது தெரியவந்ததையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா். மேலும், அவா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.