அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு ஊழியா் பணியிடை நீக்கம்
சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊராட்சிச் செயலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், வெங்கந்தூா் ஊராட்சி மன்றச் செயலராகப் பணிபுரிந்தவா் முனியாண்டி (52). இவா், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக துறை சாா்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை நிா்வாகம், ஊராட்சி செயலா் முனியாண்டியை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement