கோவில்பட்டி கோயிலுக்கு 10 பவுன் சங்கிலி தானம்
கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி தானமாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி தானமாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரும், இவரது மனைவி பத்மாவதியும் சோ்ந்து, செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு சுமாா் 10 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகளை கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பனிடம் தானமாக வழங்கினா்.
தங்கச் சங்கிலி சுவாமி, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Advertisement