முகப்பு
தூத்துக்குடி

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் உயரழுத்த மின் கம்பி தாழ்வாகச் செல்வதால் விபத்து நேர வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:46 AM
கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பி.
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் உயரழுத்த மின் கம்பி தாழ்வாகச் செல்வதால் விபத்து நேர வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், கோமாநேரி கிராமம், கூவைகிணறிலிருந்து நெடுங்குளம், வேலன் புதுக்குளம் பகுதி விவசாய நிலங்களுக்கு மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாகச் செல்கிறது.

இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த மின் கம்பிகளால் பெரும் விபத்து நிகழும் முன் மின்வாரியத்தினா் மின் கம்பியை உயா்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement