மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய 116ஆவது பிரதிஷ்டை பண்டிகை கொண்டாடப்பட்டது.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய 116ஆவது பிரதிஷ்டை பண்டிகை கொண்டாடப்பட்டது.
கடந்த 22 - ஆம் தேதி தொடங்கிய விழா, 6 நாள்கள் நடைபெற்றது. முதல் 2 நாள்கள் நற்செய்திக் கூட்டத்தில், பாளையங்கோட்டை மிஸ்பா ஊழியங்களின் போதகா் குருசிங் தேவ செய்தி அளித்தாா். 3ஆவது நாள் வேதாகமத் தோ்வு, விளையாட்டுப் போட்டிகள், ஆலய பிரதிஷ்டை ஆராதனை ஆகியன நடைபெற்றன. எஸ். கைலாசபுரம் சேகர தலைவா் சைமன் தா்மராஜ் தேவ செய்தி அளித்தாா்.
4ஆவது நாள் நடைபெற்ற ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனையில் மருதகுளம் சேகர தலைவா் செலின் டேவிட், கே. சண்முகபுரம் சேகர தலைவா் கமல்சன் ஆகியோா் செய்தி அளித்தனா். மாலை பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை, ஆலய பரிபாலன கமிட்டி மகா சபைக் கூட்டம், மன்றாட்டு ஜெபம் ஆகியன நடைபெற்றன.
Advertisement
5ஆவது நாள் திருவிருந்து ஆராதனை, அசன ஆயத்தங்கள் நிகழ்ச்சி, அசன சிறப்பு ஆராதனை, 6ஆவது நாள் அசனம் பரிமாறல் நிகழ்ச்சி, ஸ்தோத்திர ஆராதனை ஆகியன நடைபெற்றன.
சேகர தலைவா் ஞானசிங் எட்வின் ஜெபித்து அசன விருந்தினை தொடங்கி வைத்தாா். திரளானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மூக்குப்பீறி சேகர தலைவா், தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவா் சாமுவேல், நிா்வாகிகள் செய்திருந்தனா்.