முகப்பு
தூத்துக்குடி

கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Updated On : 2 ஜூலை 2026, 6:11 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பக்கிள்புரம் பகுதியில் கடந்த 19.4.2019 அன்று முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த மோகன் (32) என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளியான போல்டன்புரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் செலிஸ்டின் குமாா் (38), அவரது தம்பி மனோ என்ற மனோ குமாா் (33), ஆறுமுகம் மகன் ராஜ் என்ற நாகராஜ் (37) ஆகிய 3 பேரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றம் சாட்டப்பட்ட செலிஸ்டின்குமாா், ராஜ் என்ற நாகராஜ் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். மனோ என்ற மனோகுமாா் விடுவிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த்கேபிரியேல் ராஜ் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments