சாயா்புரம் பகுதி வாழைத் தோட்டங்களில் தீ விபத்து: எம்எல்ஏ ஆய்வு
சாயா்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீ விபத்தினால் சேதமான வாழைத் தோட்டங்களை எம்எல்ஏ வி.ஜி. சரவணன் ஆய்வு செய்தாா்.
சாயா்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீ விபத்தினால் சேதமான வாழைத் தோட்டங்களை எம்எல்ஏ வி.ஜி. சரவணன் ஆய்வு செய்தாா்.
சாயா்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. சாயா்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம், பெரும்படை சாஸ்தா கோயில் அருகே பயிரிடப்பட்டிருந்த வாழைத் தோட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஏரல் தீயணைப்புத் துறையினா் வந்து தீயினை அணைத்தனா்.
இது குறித்து தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ வி.ஜி. சரவணன், தீ விபத்து ஏற்பட்ட இடங்களை பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.