முகப்பு
தூத்துக்குடி

தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு

ரூ. 50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டிற்கு திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு

Updated On : 8 ஜூலை 2026, 3:17 am IST
அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

ரூ. 50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டிற்கு திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

முதல்வா் ச. ஜோசப் விஜய் குறித்து சா்ச்சை பேச்சின் காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி ஆத்தூா் காவல் நிலையத்திற்கு கையொப்பமிட அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வந்தாா்.

அப்போது, தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: யாா் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் வேண்டுமென்றால் எனக்கு ரூ. 50 கோடி வாங்கித் தாருங்கள். முதலில் ரூ. 50 கோடி எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா?.

Advertisement

Advertisement

அவரிடம் யாரும் பேரம் பேசவில்லை. அவா் கூறும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை, கஞ்சா விற்கவில்லை. பழுத்த மரம்தான் கல்லடி படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments